சமீபத்தில், ஜெர்மனி பெர்லினைச் சேர்ந்த “Transparency International’ என்ற அரசு சாரா அமைப்பு ஊழல் அடிப்படையில் உலக நாடுகளின் ரேங்கிங் பட்டியலை வெளியிட்டது.
இந்தப் பட்டியல் அரசின் நிதியுதவி, செயல்திறன், நிர்வாக வெளிப்படைத்தன்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இது ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் 182 நாடுகள் இடம்பெறுகின்றன.
2025-ம் ஆண்டு வெளியான, 2024-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியா 38 புள்ளிகளைப் பெற்று 96-வது இடத்தைப் பிடித்திருந்தது.
இந்த ஆண்டு 39 புள்ளிகளைப் பெற்று 91-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
இந்த ரேங்கிங்கும் பள்ளித் தேர்வுகளைப்போல 100 மதிப்பெண்களுக்கானது தான். அதிக புள்ளிகள் பெறும் நாடு, ஊழலற்ற நாடு என்கிற அடிப்படையில் டாப் இடங்களைப் பெறும்.
இந்தப் பட்டியலில், உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 42 புள்ளிகள்.
இந்தியா 39 புள்ளிகள்தான் பெற்றிருந்தாலும், இது நல்ல முன்னேற்றமே.
இந்தியாவில் அதிகரித்துள்ள டிஜிட்டல் பொது கட்டமைப்பே ஊழலற்ற பட்டியலில் இந்தியா சற்று முன்னேறியதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.