ஐந்தாவது முறையாக ஒரு அரசியல் கட்சி எந்த சமரசமும் செய்யாமல் சீட்டுக்கும் நோட்டுக்கும் பேரம் பேசாமல் தனித்து நிற்கிறது என்றால், அது இந்திய துணைக் கண்டத்திலே நாம் தமிழர் கட்சி மட்டும்தான். பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை, வனக்கொள்ளை, மது-மத போதை என்று இது ஏதுமற்ற புதிய ஒரு தேசத்தைச் செய்வோம். கடந்த 2016-ல் வெறும் 1.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றோம். மற்ற கட்சிகளாக இருந்தால் தடம் தெரியாமல் போயிருக்கும். ஆனால், கொண்ட உறுதி மற்றும் லட்சியச் சுமையால் தொடர்ந்து எவரோடும் சமரசம் செய்யாமல் தனித்துப் போராடுகிறோம்.
5 -வது முறையாக சீட்டுக்கும், நோட்டுக்கும் போகாமல் தனித்து நிற்கின்றது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். நாங்கள் கூட்டணி என்ற வியாபாரம் செய்ய வரவில்லை. அரசியல் சுதந்திரத்திற்காக தனித்து நிற்கின்றோம். மக்களை நம்பியே தனித்து நிற்கின்றோம். இது, ரசிகர் கூட்டம் இல்லை. லட்சிய கூட்டம். திரை கவர்ச்சியா, இன எழுச்சியா என்று நிரூபிக்க வந்த கூட்டம். மாநாடு என்றால் எப்படி இருக்க வேண்டும்?. கருத்தியல் புரச்சியாளர்கள் இங்கு வந்திருக்கின்றார்கள். அரசியல் பெரும் படையை கட்டி எழுப்பி வருகின்றோம்.