“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு! | Vijay plans fro Edappadi Constituency

Spread the love

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட முடியாத காரணத்தினால் 233 தொகுதிகளில் மட்டுமே களமிறங்க உள்ளது. எனவே எடப்பாடி தொகுதியிலும் தனது கொடி பறக்க வேண்டுமென முடிவெடுத்துள்ள விஜய் புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், விசில் சின்னத்தில் த.வெ.க சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். ஆனால், த.வெ.க தலைமையே எதிர்பார்காத ட்விஸ்ட் எடப்பாடி தொகுதியில் நடந்தேறியது. அந்த தொகுதிக்கு த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது.

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

அ.தி.மு.க தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
KURUZ THANAM

அதோடு மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த, அவரின் மனைவி மனுவும் உரிய தகவல் இல்லாமல் போனதால் நிராகரிக்கப்பட்டது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், த.வெ.க அங்கு போட்டியிட முடியவில்லை. ஏற்கனவே திட்டமிட்டு, தனது வேட்புமனுவில் உரிய தகவல்களை பதிவிடாமல் இருந்ததோடு,வேட்புமனு பரசீலனை அன்று வேட்பாளரும் மாயமாகிவிட்டார்.

“இந்த தொகுதியில் அ.தி.மு,க வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் போட்டியிடுவதால், த.வெ.கவினால் தனது வாக்குகள் பிரிந்துவிடாமல் இருக்கவே, அ.தி.மு.க தரப்பு அருண்குமாரை விலைக்கு வாங்கிவிட்டது“ என த.வெ.க-வினர் புலம்பி வருகிறார்கள்.

“எங்கள் தொகுதிக்கு சரியான வேட்பாளரை நிறுத்தியிருந்தால் இப்படி நடந்திருக்காது” என் த.வெ.க தலைமை நிர்வாகிகளிடம் குமுறியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நாம் களம் காண வேண்டுமென விஜய் தனது நிர்வாகிகளிடம் சொல்லியுள்ளார். இதனால் புதிய யுக்தியை த.வெ.க தலைமை கையில் எடுத்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *