அவர், “படத்தில் உண்மையான மல்யுத்த வீரரின் உடலமைப்பைப் கொண்டு வருவதற்காக எட்டு மாதங்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார் ராம் சரண்.
உடல் தசைகளை மெருகேற்றி, கதாபாத்திரத்தின் உடல் மொழி, நடை என அனைத்தையும் முழுமையாக உள்வாங்க வேண்டியிருந்தது.
திரையில் இந்த உடல் மாற்றம் இயல்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக ராம் சரண் கடுமையாக உழைத்தார்.
ஆனால் மிகவும் ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், ஐயப்பனுக்காக அவர் மாலை போட்டிருந்த நேரத்திலும் அவர் தனது உடற்தகுதியைக் கவனித்துக் கொண்டார்.
அப்போது கடுமையான ஆன்மீக ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டியிருந்தாலும், ராம் சரண் ஒரு நாள்கூட பயிற்சியை நிறுத்தவில்லை.
சைவ உணவை மட்டுமே எடுத்துக் கொண்டு தனது உடலைச் சிறப்பாகப் பராமரித்தார். இந்த உறுதியும் ஒழுக்கமும் பலரை வியக்க வைத்தது” எனக் கூறியிருக்கிறார்.