எந்த அளவுக்குக் குடிக்கலாம்.. மதுபாட்டிலில் குறிப்பிடக் கோரிய மனு தள்ளுபடி

dinamani2Fimport2F20222F12F122Foriginal2Ftasmac
Spread the love

சென்னை: எந்த அளவுக்கு மது குடிக்கலாம் என்பதை மதுபாட்டிகளில் குறிப்பிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மது பாட்டில்களில் மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு என குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அளவு மதுவைக் குடிக்கலாம் என பாட்டிலில் குறிப்பிடும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக்கூறி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் ஏ.ஸ்ரீதரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைத்து படிப்படியாக பூரண மதுவிலக்கைக் கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் வாங்கப்படும் மது பாட்டில்களில் எந்த அளவுக்கு குடிக்கலாம் என்பதை குறிப்பிட வேண்டும். மதுவால் ஏற்படும் குடும்ப வன்முறை சம்பவங்கள், குழந்தையின்மை, இளம் விதவைகள் அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், இதுதொடர்பாக மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவுக்கு பதில் அளிக்கப்பட்டுவிட்டது. மது அருந்துதல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மது பாட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *