”எனக்காக அஜித் 6 மாதம் காத்திருந்தார்!” – ரவி கே சந்திரன் பேட்டி |”Ajith waited for me for 6 months!” – Ravi K. Chandran’s interview

Spread the love

இந்திய சினிமாவின் சீனியர் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவர் ரவி கே. சந்திரன்.

“கண்ணத்தில் முத்தமிட்டாள்’, ‘ஆய்த எழுத்து’, ‘தில் ஜாதா ஹை’, ‘கஜினி (இந்தி ரீமேக்)’ உள்ளிட்ட பல ஹிட் படைப்புகளின் ஃபிலிம்களோடு உறவாடியவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த ‘பராசக்தி’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நம் சினிமா விகடன் யூட்யூப் சேனலின் ‘பாயின்ட் ஆஃப் வியூ’ தொடருக்காக அவரைச் சந்தித்து உரையாடினோம்.

நம்மிடையே பேசிய ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், “தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களுக்கும் நான் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன்.

மும்பையில் எனக்கு வீடு இருந்தது, அதனால் பாலிவுட்டில் நீண்ட வருடங்கள் பணி புரிந்தேன். அங்கிருக்கும் அத்தனை பெரிய இயக்குநர்களுடனும் நான் பணிபுரிந்துவிட்டேன்.

இப்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிற ‘துரந்தர்’ பட இயக்குநர் ஆதித்ய தர் இயக்கவிருந்த முதல் படத்திற்கு நான்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டியது.

ஆனால், அப்போது மிஸ் ஆகிவிட்டது.” என்றவர், “நானும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒன்றாக இங்கு சென்னையில் வாக்கிங் போவோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *