வாய்ப்புக்காக காத்திருந்தேன்
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும், தனக்கான வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தில்லி கேபிடல்ஸ் அணி வீரர் கருண் நாயர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், நான் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தேன். நான் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளேன். அதனால், போட்டிகள் எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்குத் தெரியும். என்னுள் நான் கூறிக்கொண்டது என்னவென்றால், முதலில் சில பந்துகளை பொறுமையாக எதிர்கொண்டு, அதற்கு பின் அதிரடியாக விளையாடிக் கொள்ளலாம் எனக் கூறிக்கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அனைத்தும் நன்றாக அமைந்தது. நான் நன்றாக விளையாடியது மகிழ்ச்சியளித்தது.