எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா? – ஓபிஎஸ்​-க்கு நயி​னார் நாகேந்​திரன் கேள்வி | Nainar Nagendran questioned to ops is there any proof for to write a letter

1371804
Spread the love

ஈரோடு: எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில், ஆடிப்​பெருக்​கையொட்டி நடந்த ஹோமம் மற்​றும் சிறப்பு பூஜை​யில் பங்​கேற்ற நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் சட்​டம்​-ஒழுங்கு சீர்​குலைந்​துள்​ளது.

சொத்து வரி, மின் கட்​ட​ணம் பல மடங்கு உயர்ந்​துஉள்​ளது. தேர்​தல் நெருங்​கு​வ​தால்தற்​போது அனைத்து மகளிருக்​கும் ரூ.1,000 உரிமைத்​தொகை வழங்​கு​வ​தாக கூறுகின்​றனர்.

திமுகவினர் தேர்​தல் வாக்​குறு​தி​கள் பலவற்றை நிறைவேற்​ற​வில்​லை. நாமக்​கல் மாவட்​டம் கிட்னி விற்​பனை​யில் முதல் இடத்​தில் உள்​ளது. அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா மேடை​யில் திமுக எம்​.பி. எம்​எல்ஏ இடையே ஏற்​பட்​டுள்ள மோதல், அவர்​களிடம் ஒற்​றுமை இல்லை என்​பதை வெளிப்​படுத்​துகிறது. திமுக​வில் மட்​டுமல்​லாது, இண்​டியா கூட்​ட​ணி​யிலும் ஒற்​றுமை இல்​லை.

தேர்​தலின்​போது யாருக்கு எவ்​வளவு சீட்டு ஒதுக்​கப்​படும் என்​ப​தை​விட, திமுக ஆட்​சியை வீழ்த்த வேண்​டும் என்​பதே எங்​கள் நோக்கம். ஓ.பன்​னீர்​செல்​வம் எழு​திய கடிதம் இது​வரை எனக்கு வரவில்​லை. எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஆதா​ரம் இருக்​கிற​தா? அவ்​வாறு ஆதா​ரம் இருந்​தால் ஓபிஎஸ் அதை என்​னிடம் காண்​பிக்​கட்​டும்.

நான் பன்​னீர்​செல்​வத்தை குறை கூற மாட்​டேன். அவர் முதல்​வரை சந்​திப்​ப​தற்கு முதல் நாள்​கூட செல்​போனில் தொடர்பு கொண்டேன். அவர் கூப்​பிட்ட போதெல்​லாம், நான் பேசி​யுள்​ளேன். தற்​போது இத்​தகைய குற்​றச்​சாட்டை அவர் தெரி​விப்​பது ஏன் என்று தெரிய​வில்​லை? முதல்​வரை எளி​தாக சந்​திக்க முடி​யாது என்​ப​தால், போது​மான முன்​னேற்​பாடு​கள் செய்த பின்​னரே பன்​னீர்​செல்வம், முதல்​வரை சந்​தித்​துள்​ளார். இவ்​வாறு நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *