என்டிஏ கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்க்க தயார்: நயினார் நாகேந்திரன் அழைப்பு  | Nainar Nagendran calls parties for NDA alliance

1379457
Spread the love

ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு (என்​டிஏ) யார் வந்​தா​லும் சேர்த்​துக்​கொள்ள தயா​ராக இருக்​கிறோம்’ என்று பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்​தல் பிரச்​சா​ரப் பயணத்​தை, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் இன்று (அக்​.12) மதுரை​யில் தொடங்​கு​கிறார். இதையொட்டி நேற்று ஸ்ரீவில்லிபுத்​தூர் ஆண்​டாள் கோயி​லில் நயி​னார் நாகேந்​திரன் தரிசனம் செய்​தார். பாஜக மாநில துணைத்​தலை​வர் கோபால்​சாமி, வழக்​கறிஞர் கே.எஸ்​.​ரா​தாகிருஷ்ணன், மாவட்​டத் தலை​வர் சரவணதுரை ராஜா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் வரவேண்​டும் என ஆண்​டாள் சந்​நி​தி​யில் வேண்​டினேன். தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சுற்​றுப்​பயணம் செய்து வரு​கிறார். பாஜக சார்​பில்நான் நாளை (இன்​று) மதுரை​யில் பிரச்​சார பயணத்​தைத் தொடங்கி தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளேன். பேரணி மதுரை​யில் தொடங்​கி​னாலும் ஆண்​டாள் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​து, இங்​கிருந்தே எனது பயணத்​தைத் தொடங்​கு​கிறேன். தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்.

அதிமுக மீது தினகரன் விமர்சனம்: அதி​முக மீது டிடி​வி.​தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரிய​வில்​லை. என் மீதும் வெறுப்​புடன்​தான் பேசி​னார். அவர்​களது சொந்த பிரச்​சினைக்​காக கட்​சிகளைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது என்​பது என் கருத்​து. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்கு யார் வந்​தா​லும் சேர்த்​துக்​கொள்​ளத் தயா​ராக இருக்​கிறோம். ஜனவரி மாதத்​தில் கூட்​டணி இறுதி வடிவம் பெறும்.கூட்​டணி பலமாக உள்​ள​தால் திமுக​தான் ஆட்சி அமைக்​கும் என்​கிற வதந்தி தமிழகத்​தில் பரவி வரு​கிறது. அதைப் பொய்​யாக்கி தேசிய ஜனநாயகக் கூட்​டணி ஆட்​சிக்கு வரும்.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *