“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”: மீண்டும் உயர்ந்த தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்வு – Kumudam

Spread the love

சென்னையில் நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,890-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் விளைவாக, ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,19,120 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. 

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும், அதற்குப் போட்டியாக நேற்று அதிகரித்த வெள்ளியின் விலை இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதன் மூலம் ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,90,000 (2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்) என்ற விலையிலும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,440 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,930 விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.295 விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,95,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருவதால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலை உயர்வுக்குக் காரணமாக அமைவதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *