ஏனெனில் ஒரு தலைமைச் செயலாளரின் குழந்தைகளையும், கல்வியோ, போதிய வாழ்வாதாரமோ இல்லாத விவசாயத் தொழிலாளியின் குழந்தைகளையும் எப்படி சமமாக மதிப்பிடப்பட முடியும்? இதைக் கற்பனை செய்வதே கடினமாக இருக்கிறது. சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக நடத்துவதைக் குறிக்காது, ஏனெனில் அது மேலும் சமத்துவமின்மைக்கு வழிவகுக்கும்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மையமாகக் கொண்ட நீதிமன்றம். இந்தப் பாரம்பரியக் கருத்திலிருந்து விலகி, நிறுவனம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு, சக ஊழியர்கள் அனைவரையும் கலந்தாலோசிப்பேன். எனது குறுகிய காலத்தில், 107 நீதிபதிகள் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

எனக்கு இணக்கமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்த கொலீஜியம் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி. கடந்த மூன்று ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் பசுமை பெஞ்சிற்கு தலைமை தாங்கி வந்தேன்.
தலைமை நீதிபதியாக முதல் வழக்கின் தீர்ப்பு புனேவில் உள்ள ஒரு வன நிலத்தைப் பாதுகாக்க வழங்கப்பட்டது. என்னுடைய கடைசி தீர்ப்பு ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடரைப் பாதுகாக்க வழங்கப்பட்டிருக்கிறது.