என்னை விடஅழகாக இருக்ககூடாது: 6 வயது சிறுமி, மகன் உட்பட 4 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த பெண் |Jealous Woman Drowns Four, Says “No One Should Be More Beautiful Than Me”

Spread the love

உடனே அச்சிறுமியின் தலையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொண்டு பூஜா கொலை செய்துள்ளார். சிறுமி இறந்தபின் எதுவும் தெரியாதது போல் ஸ்டோர் ரூம் கதவை பூட்டிவிட்டு பூஜா சென்றுவிட்டார். போலீஸார் பூஜாவை கைது செய்து விசாரித்தபோது அவர் கூறிய பதில் போலீஸாரை அதிர்ச்சியடையச் செய்தது. கொலை செய்யப்பட்ட சிறுமி, பூஜாவின் சகோதரரின் மகள் ஆவார்.

சிறுமி தன்னைவிட அழகாக இருந்ததாகவும், எனவே கொலை செய்ததாகவும், “என்னை விட குடும்பத்தில் யாரும் அழகாக இருக்கக்கூடாது” என்ற பொறாமையால் இக்கொலையை செய்ததாக பூஜா தெரிவித்துள்ளார்.

பூஜா இந்தக் கொலை மட்டுமல்லாது இதற்கு முன்பும் இதே முறையில் சொந்த மகனையும் கொலை செய்துள்ளார்.

அதோடு மேலும் இரு சிறுமிகளையும் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அனைத்திற்கும் காரணம், அவர்கள் பூஜாவை விட அழகாக இருந்தார்கள் என்பதே.

சடலம்

சடலம்
representative image

போலீஸார் கூறுகையில், “பூஜா அழகான சிறுமிகளை மட்டும் குறிவைத்து இக்காரியத்தை செய்து வந்துள்ளார். விசாரணையில், சொந்த மகன் உட்பட நால்வரைக் கூட இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு முன்பு நடந்த மூன்று மரணங்களும் விபத்து மரணம் என நாங்கள் நினைத்திருந்தோம். ஆனால் விதி கொலை விசாரணையில், ஏற்கனவே மூன்று பேரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்” என்றனர்.

2023ஆம் ஆண்டு தனது மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவைக் இதே முறையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை செய்தபின், அது கொலை என்று தெரிந்துவிடும் என்ற பயத்தில், தனது 3 வயது மகனையும் அதேபோல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதமும் இதேபோல தனது சகோதரரின் 6 வயது மகளையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *