என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக டிடிவி தினகரன்? வெளியான பரபரப்பு தகவல் | தமிழ்நாடு

Spread the love

Last Updated:

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த பொதுக் கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகைப்படம் இடம் பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகிய நிலையில், அவரை மீண்டும் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுவது குறித்து டிடிவி தினகரன் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து இந்த பேனர் விவாத பொருளான நிலையில் அது அகற்றப்பட்டது.

இந்நிலையில், அதுகுறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்னுடைய தனிப்பட்ட விவகாரத்திற்காக டெல்லி சென்றேன். கூட்டணி குறித்து யாரும் எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. நாங்கள் யாருடன் கூட்டணி என்பதை உரியவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார்கள். எனக்கு எந்த அழுத்தமும் யாராலும் கிடையாது. உரிய நேரத்தில் அமமுக எந்த கூட்டணியில் சேருகிறது என உரியவர்கள் அறிவிப்பார்கள்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் என்.டி.ஏ. கூட்டணி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க அமமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தயாராக இருக்குமாறு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *