தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி வென்ற இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இடம்பெற்றிருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்.
இருப்பினும் எதிர்பாராத சூழல்களால் யுவராஜ் சிங் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடிக்க முடியாமல் போனார்.

இதனைத்தொடர்ந்து தனது மகன் இந்திய அணியில் இடம்பெறாமல் போனதற்கு தோனிதான் காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் குற்றம்சாட்டி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அதேபோல முன்னாள் கேப்டன் கபில் தேவ் மீதும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.