‘என் மகனுக்கு இல்லை என்றால் எனக்கு..!’-கணக்கு போடும் திருநாவுக்கரசர்; கல்தா கொடுக்கிறதா கட்சி தலைமை?

Spread the love

இந்த விவகாரம் குறித்து, தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸிடம் பேசினோம்.

“திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, எல்லாரும் தான் கேட்பார்கள். 37 பேர்களை நேர்காணல் செய்து, மேலிடத்துக்கு லிஸ்ட் அனுப்பியிருக்கிறோம். 37 பேர்களில் திருநாவுக்கரசர் பெயர் இருக்கிறதா என்பது கட்சி விவகாரம் என்பதால், அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார்.

இறுதியாக, திருநாவுக்கரசரிடம் பேசினோம்.

“காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை” என்றார்.

திருநாவுக்கரசரின் சீட் பெறும் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *