“என் முதல் படத்திலிருந்தே என்னுடைய அணுகுமுறை அப்படித்தான்” – சிறை திரைப்படம் குறித்து விக்ரம் பிரபு | “That has been my approach right from my first film,” – Vikram Prabhu on the film ‘Sirai’.

Spread the love

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சிறை”. இப்படத்தில் எல்.கே. அக்ஷய் குமார் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இவர் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன். விக்ரம் பிரபுவை வைத்து `டாணாக்காரன்’ என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் தமிழின் கதையை வைத்துதான் இப்படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், நேற்று சென்னையில் நடிகர் விக்ரம் பிரபு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “என் 25-வது படம் 25-ம் தேதி வெளியாகிறது. என்னுடைய டாணாக்காரன் படக்குழுவுடன் மீண்டும் சேர்ந்து பயணித்தது பெரும் மகிழ்ச்சி.

டாணாக்காரன் படப்பிடிப்பில்

டாணாக்காரன் படப்பிடிப்பில்

`டாணாக்காரன்’ படத்தின் இயக்குநர் தமிழ் அவரின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதைதான் `சிறை’. நல்ல படம், நல்ல கதை எடுத்து வந்திருக்கிறோம் என நம்புகிறோம். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். டாணாக்காரன் தியேட்டரில் வெளியாகவில்லை. ஆனால், `சிறை’ தியேட்டரில் வெளியாகிறது. இதுவே பெரிய சந்தோஷம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *