இதில் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன், நாஞ்சில் சத்தியராஜ் உள்ளிட்டோர் வைத்தியுடன் செல்வதற்குச் சம்மதித்து விட்டதாகச் சொல்கிறார்கள். மற்றவர்கள் அதிமுகவில் இணைய பேசி வருகின்றனர்.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர், வரும் தேர்தலில் தனக்கு மற்றும் தன்னை சேர்ந்தவர்களுக்கு என மூன்று சீட் கேட்டிருக்கிறார். வைத்தியின் வருகையை அமைச்சர் கே.என்.நேரு தரப்பு எதிர்த்துள்ளது.
வெல்லமண்டி நடராஜனுக்கு மவுசு இல்லாத பட்சத்தில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனத் தலைமையிடம் கேட்டுள்ளனர். அவர்களைச் சமாதானம் செய்த தலைமை, வைத்தியிடம் உங்களுக்கு சீட், அமைச்சர் பதவி தருவதாகக் கூறி டீல் பேசி முடிக்கப்பட்டதாம்.

இன்று காலை 11.30 மணியளவில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வைத்திலிங்கம் அதன் பிறகு அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். அவருடன் வெல்லமண்டி நடராஜன், ஆர்.டி.ராமச்சந்திரன் ஆகியோரும் செல்ல இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நேற்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு மத்திய மாவட்ட செயலாளரான துரை.சந்திரசேகரன், எம்.பி முரசொலி உள்ளிட்டோரை திரும்பி வரச்சொல்லி திமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வர பாதியில் மீண்டும் சென்னை திரும்பி விட்டனர். இதனால் வைத்தி அறிவாலயத்தில் அடைக்கலமாவது உறுதி என்றனர்.