எய்ம்ஸ் கட்டுமானம் ஜனவரியில் நிறைவடையும்: உயர் நீதிமன்றத்தில் தகவல் | AIIMS construction to be completed in January

1372324
Spread the love

மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பல ஆண்​டு​களுக்கு முன்பு தாக்​கல் செய்த மனு​வில், “மதுரை தோப்​பூரில் 224.24 ஏக்​கர் பரப்​பில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டப்​படும் என மத்​திய அரசு 2018 ஜூன் மாதம் அறி​விப்பு வெளியிட்​டது. 2019-ல் பிரதமர் மோடி அடிக்​கல் நாட்​டி​னார்.

இதற்​காக நிலங்​கள் கையகப்​படுத்​தப்​பட்​டு, ரூ.10 கோடி​யில் 5.50 கிலோமீட்​டர் சுற்​றள​வில் சுற்​றுச்​சுவர் கட்​டப்​பட்​டது. அதன் பிறகு தற்​போது வரை கட்​டு​மானப் பணி​யைத் தொடங்​கப்​பட​வில்​லை. எனவே, எய்ம்ஸ் கட்​டு​மானப் பணியை விரைந்து முடிக்க உத்​தர விட வேண்​டும்” என்று வலி​யுறுத்தி இருந்​தார்.

இந்த மனு நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி.மரியா கிளாட் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. மத்​திய அரசு வழக்கறிஞர் வாதிடும்​போது, “மதுரை எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் விரை​வாக நடை​பெற்று வரு​கின்​றன. பல கட்டங்​களாக பணி​கள் நடை​பெறுகின்​றன.

50 சதவீத பணி​கள் முடிவடைந்​துள்​ளன. முதல்​கட்ட கட்​டு​மானப் பணி​கள் வரும் ஜனவரி மாதம் முடிவடை​யும். ஜனவரி 26-ல் மருத்துவ​மனை கட்​டிடம் ஒப்​படைக்​கப்​படும்” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

மனு​தா​ரர் தரப்​பில், “குறிப்​பிட்ட காலத்​துக்​குள் கட்​டு​மானப் பணியை முடிக்க உத்​தர​விட வேண்​டும்” என்​றார். இதையடுத்து நீதிபதிகள், “கட்​டு​மானப் பணி​கள் விரை​வாக நடந்து வரு​கின்​றன என மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஒரு மருத்​து​வ​மனையை குறிப்​பிட்ட காலத்​துக்​குள் கட்டி முடிக்க வேண்​டும் என நீதி​மன்​றம் உத்​தர​விட முடி​யாது. மனு முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்​தர​விட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *