“எல்லா கட்சி வாக்குகளையும் தவெக பிரிக்கும்” – கணிக்கிறார் கொமதேக ஈஸ்வரன் | Kongu Easwaran interview

1379582
Spread the love

​கொங்கு மண்​டலத்​தில் அதி​முக​விடம் இழந்த தொகு​தி​களை மீட்க, திமுக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​று, தீவிர​மாக களமாடி வரு​கிறது கொமதேக. கரூர் சம்​பவத்​தால், ‘கொங்கு மண்​டலத்​தில் திமுக கூட்​ட​ணிக்கு பின்​னடைவு ஏற்​படு​மா’ என்​ப​தில் தொடங்​கி, ‘தொகுதி மாறி போட்​டி​யிடப் போகிறீர்​களா’ என்​பது வரை, எல்​லாக் கேள்வி​களுக்​கும், தனது இயல்​பான பாணி​யில், பதில் அளித்​துப் பேசி​னார் கொமதேக பொதுச்​ செய​லா​ளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்​.எல்​.ஏ.. அவரது பேட்​டி​யில் இருந்​து…

கரூர் சென்று இருந்​தீர்​களா… அங்​குள்ள மக்​களின் மனநிலை எப்​படி உள்​ளது?

அசம்​பா​வித சம்​பவம் நடந்த அடுத்த நாள் காலை கரூர் சென்று வந்​தேன். அப்​போது, எல்லா கட்​சித் தலை​வர்​களும் வந்து பார்த்து சென்​றனர். ஆனால், இந்த சம்​பவத்​திற்கு காரண​மான தவெக​வினர் யாரும் அங்கு இல்​லை. அக்​கட்​சிக்கு கட்​டமைப்பு இல்லை என்​பதை அப்​போது புரிந்து கொண்​டேன். அங்​குள்ள எல்​லோரிட​மும் வருத்​த​மும்,சோக​மும் இருந்​தது. ஆனால், இன்​னும் இரண்டு மாதம் சென்​றால், இன்​னொரு பெரிய சம்​பவம் நடந்​தால்,

மக்​கள் எல்​லா​வற்​றை​யும் மறந்து விடு​வார்​கள்.

கரூர் சம்​பவத்​தால் கொங்கு மண்​டலத்​தில் திமுக கூட்​ட​ணிக்கு பின்​னடைவு ஏற்​படுமா?

அரசி​யல் ரீதி​யாக இருதரப்​பும் குற்​றம் சாட்​டிக் கொண்​டிருக்​கிறார்​கள். ஆனால், தேர்​தலில் இது தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று நான் நம்​ப​வில்​லை.

கரூரில் 41 பேரை அடித்​துக் கொன்று விட்​டனர் என்று பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் பேசி​யிருப்​பது சர்ச்​சை​யாக உள்​ளதே?

இந்த கருத்தை அவ்​வளவு சீரியஸாக எடுத்​துக் கொள்ள வேண்​டிய​தில்​லை. அவர் தெரி​வித்​தது கடுமை​யான கருத்​து​தான் என்​றாலும், தவறி வந்து விட்​ட​தாகவே கருதுகிறேன். மேலும், இது​போன்று பேசுவ​தால் எந்த பயனும் பாஜக​வுக்கு கிடைக்​கப் போவ​தில்​லை.

ஊர், தெருக்​களுக்கு சாதி பெயர் கூடாது என்ற அரசாணைக்கு எதிர்ப்பு எழுந்​துள்​ளதே?

எல்லா அரசுகளும் இது போன்ற முயற்​சிகளை எடுத்​துள்​ளன. அதனால் சாதி எல்​லாம் மறைந்​து, சமூக நீதி வந்​து​விடும் என்று சொல்ல முடி​யாது.

ஜிஎஸ்டி விதிப்​பால் பல்​வேறு தொழில்​கள் பாதிக்​கப்​பட்​ட​தாக கூறி வந்​தீர்​கள். இப்​போது ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளதை வரவேற்​கிறீர்​களா?

தற்​போது ‘ஸ்​லாப்​’பில் தான் மாற்​றம் செய்​துள்​ளார்​கள். இதனால் பெரிய மாற்​றம் ஏதும் ஏற்​பட​வில்​லை. மற்ற நாடு​களைப் போல், எல்லா பொருட்​களுக்​கும் 6 சதவீத ஜிஎஸ்டி என்று அறி​வித்​தால் மட்​டுமே, மாற்​றம் என்று சொல்ல முடி​யும். அதனால் மட்​டுமே பலன் கிடைக்​கும்.

கொங்கு வேளாள​ருக்கு 10 சதவீத இட ஒதுக்​கீடு, கள்​ளுக்​கான தடையை நீக்க வேண்​டும் என்​பது போன்ற உங்​களின் நீண்ட நாள் கோரிக்​கைகளை அரசு நிறைவேற்​ற​வில்​லை​யே?

இந்த இரு கோரிக்​கைகள் குறித்து போராட்​டங்​களை நடத்​தி​யுள்​ளோம். சட்​டசபை​யில் பேசி வலி​யுறுத்தி உள்​ளேன். இந்த முயற்சி தொடரும்.

கடந்த 2017-ல் இருந்து திமுக கூட்​ட​ணி​யில் இருந்​தும் உங்​கள் பிர​தான கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட​வில்​லை​யே?

கோவை மேம்​பாலத்தை நீலாம்​பூர் வரை நீட்​டித்​தல், எல் அண்ட் டி ஆறு​வழிச்​சாலை விரி​வாக்​கம்​, சேலம் – உளுந்​தூர்​பேட்டை நான்கு வழி சாலை என எங்​களது பல கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளன. அதோடு, டாஸ்​மாக் மது பாட்​டில்​களை பொது இடங்​களில் வீசுவ​தால் ஏற்​படும் பாதிப்​பு​கள் குறித்து சட்​டசபை​யில் பேசி​ய​தால், அதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்​பட்​டுள்​ளது. கொள்கை ரீதி​யான சில விஷ​யங்​கள் பரிசீலனை​யில் உள்​ளன.

கடந்த சட்​டசபை தேர்​தலில் கொங்கு மண்​டலத்​தில் உள்ள 39 தொகு​தி​களில், 23 தொகு​தி​கள் அதி​முக வசம் உள்​ளன. அவற்றை மீட்க என்ன வியூ​கம் வகுத்​துள்​ளீர்​கள்​?

திமுக கூட்​டணி சார்​பில் தேர்​தல் பணி​களை வேகப்​படுத்​தி​யுள்​ளோம். எனவே, வரும் தேர்​தலில் நல்ல ‘ரிசல்ட்’ இருக்​கும் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. அதே நேரத்​தில் கொங்கு மண்​டலத்​தில், பாலம், சாலைகளுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து நிறைவேற்​றியது போல், நீண்​ட​கால​மாக நிறைவேற்​றப்​ப​டாத நீர்​பாசனத் திட்​டங்​களுக்கு அரசு முக்​கி​யத்​து​வம் தர வேண்​டும். திரு​மணி​முத்​தாறு, பாண்​டி​யாறு – புன்​னம்​புழா, மேட்​டூர் உபரிநீர் திட்​டம், ஆனைமலை​யாறு – நல்​லாறு, வசிஷ்ட நதி இணைப்பை உதா​ரண​மாக கூறலாம்.

தவெக வரு​கை​யால் எந்த கட்​சிக்கு அதிக பாதிப்பு ஏற்​படும் என நினைக்​கிறீர்​கள்​?

அரசின் மீதான அதிருப்தி வாக்​கு​கள், அக்​கட்​சிக்​குச் செல்​லும். இது திமுக கூட்​ட​ணிக்கு சாதக​மாக அமை​யும். தவெக​வில் உள்ள இளைஞர்​கள் கட்​சிகளில் இல்​லாதவர்​கள். புது வாக்​காளர்​கள். இந்​நிலை​யில், எல்லா கட்சி வாக்​கு​களை​யும் தவெக பிரிக்​கும். நாம் தமிழர் கட்சி வாக்​கு​களை கூடு​தலாகப் பிரிப்​பார்​கள்.

அதி​முக – பாஜக கூட்​ட​ணி​யில் தவெக இணை​யும் என்​பது போன்ற தகவல்​கள் வரு​கின்​றன. ஒரு​வேளை அப்​படி இணைந்​தால் அது பலமான அணி​யாக இருக்​கு​மா?

யூகத்​தின் அடிப்​படை​யில் பேசி பிரயோஜனம் இல்​லை. இருந்​தா​லும், இது போன்ற கூட்​டணி அமைந்​தால் கொஞ்​சம் ‘பைட்’ கொடுப்​பார்​கள். இதனால் அவர்​களது வாக்கு சதவீதம் கொஞ்​சம் அதி​க​மாகலாம். வெற்றி வித்​தி​யாசம் எங்​களுக்​குக் குறைய​லாம்.

எல்​லாக் கட்​சிகளும், கூடு​தல் தொகு​தி​களைக் கேட்​கத் தொடங்கி விட்​டனர். நீங்​களும் கேட்​பீர்​களா?

அது தேர்​தல் நேரத்​தில், கூட்​டணி தலை​வரிடம் கேட்க வேண்​டியது. பத்​திரி​கை​யில் கேட்க முடி​யாது.

கொமதேக​வில் இருந்து வில​கி, அதி​முக பொதுச்​செய​லா​ளர் இபிஎஸ் முன்​னிலை​யில், ஆயிரக்​க​ணக்​கானோர் இணைந்​த​தாக செய்தி வெளி​யாகி இருக்​கிறதே?

எங்​களது கட்​சி​யில் மாவட்ட செய​லா​ள​ராக இருந்த ஒரு​வரை நான்கு மாதங்​களுக்கு முன் நீக்கி விட்​டோம். அவரோடு சேர்ந்து மொத்​தம் 11 பேர் போயிருக்​கிறார்​கள். மேலும் கட்​சி​யில் இணைந்​தவர்​கள் என இபிஎஸ் கொடுத்த 41 பேர் லிஸ்​டில், 11 பேர் தான் அங்கு வந்​துள்​ளனர். நாங்கள் அதைப் பற்றி கவலைப்​பட​வில்​லை. நாங்​கள் வெளி​யில் அனுப்​பிய ஒரு​வரை, வேறு கட்​சி​யில் சேரக்​கூ​டாது என்று சொல்ல முடி​யு​மா? சேர்ந்த இடத்​திலா​வது, அவர் நன்​றாக வேலை பார்க்​கட்​டும்.

வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், திருச்​செங்​கோடு தொகு​தி​யில் இருந்து வேறு தொகு​திக்கு மாறப்​போகிறீர்​கள்​ என தகவல்​ வரு​கிறதே?

திருச்​செங்​கோடு தொகு​தி​யில்​ பல்​வேறு நலத்​திட்​டங்​களை செயல்​படுத்​தி​யுள்​ளேன்​. நான்​ ஏன்​ தொகுதி மாற வேண்டும்?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *