எல்.பி.ஜி கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த ஆட்டோ ஓட்டுனர்கள்! – திருச்சி நிலவரம் – trichy ubdate!

Spread the love

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஹர்முஸ் நீர்வழிப்பாதையை மூடி உள்ளது. இதனால், உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பரவிய வதந்தியின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் பங்குகளில் அதிக அளவு மக்கள் தங்களுக்கு தேவையான அளவைவிட அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்கி சென்று வருகின்றனர். இதனிடையே, திருச்சி மாவட்டத்தில் ஆட்டோக்களுக்கு lpg எரிவாயு நிரப்பும் சுமார் 12 எல்.பி.ஜி பங்குகள் உள்ளது. அதில், எல்.பி.ஜி கேஸ் இல்லாமல் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *