எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் நவ. 24-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் தகவல் | Thirumavalavan informs VCK Protest for condemning SIR in Chennai

Spread the love

சென்னை: எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்​னை அசோக் நகரில் உள்ள விடு​தலை சிறுத்​தைகள் கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில் அக்​கட்சி தலை​வர் திரு​மாவளவன், அபு​தாபி​யில் நடை​பெற உள்ள குத்து சண்டை போட்​டி​யில் பங்​குபெற உள்ள இரண்டு வீராங்​க​னை​களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்​கிய பின் நிருபர்​களிடம் கூறிய​தாவது: பாஜக மற்​றும் தேர்​தல் ஆணை​யம் என இரண்டு நிறு​வனங்​களும் கூட்டு சேர்ந்து எஸ்​ஐஆர் திட்​டத்தை கொண்டு வந்து உள்​ளனர்.

தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை கைவிட வேண்​டும் என விசிக தொடரந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்​டுமே உள்​ளது. குறுகிய காலத்​தில் வாக்​காளர்​கள் தங்​கள் பெயர்​களை சேர்ப்​பது சவாலாக உள்​ளது.

தமிழகத்​தில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களை கண்​டித்து வரும் 24-ம் தேதி விசிக சார்​பில் சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற உள்​ளது. தமிழக வெற்​றிக் கழகம் இன்​னும் அரசி​யல் களத்​துக்கு முழு​வதும் வரவில்​லை. தவெக தலை​வர் விஜய் எஸ்​ஐஆர் குறித்து பேசி விடியோ​வில் பாஜகவை பற்றி பேச​வில்​லை. தவெக கருத்து முரணாக உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *