எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை: ஜெயக்குமார் குற்றச்சாட்டு | Collectors prohibited from giving SIR forms to ADMK: Jayakumar

Spread the love

எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்​ள​தாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்​பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்​குமார் தெரிவித்​துள்​ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை ராயப்​பேட்​டையில் உள்ள கட்சி தலைமை அலுவல​கத்தில் நேற்று செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்​தவர்​களின் பெயர்கள் நீக்கப்​பட்டு வெளிப்​படையான வாக்காளர் பட்டியல் உருவாகும் என்பதற்காக தான் எஸ்ஐஆரை ஆதரித்​தோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நல்ல நோக்கத்தை சிதைக்கும் வகையில் திமுக அரசு படிக்​காதவர்​களை​யும், திமுக​வினரையும் பிஎல்​ஓக்களாக நியமித்து, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக​வினருக்கு மட்டுமே எஸ்ஐஆர் படிவம் கொடுக்க வேண்டும், அதிமுக​வினருக்கு படிவங்களை கொடுக்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்​பித்​துள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், எஸ்ஐஆர் பணியில், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்​பட்டு வருகி​றார்.

வீடு வீடாக படிவங்களை கொடுப்​பதும், பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதும் பிஎல்​ஓக்​களின் வேலை. ஆனால் பிஎல்​ஓக்களை மிரட்டி, படிவங்களை திமுக​வினர் மொத்தமாக பெற்றும், ஒரே இடத்தில் அமர்ந்து, அவர்களுக்கு வேண்டிய​வர்​களின் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்​கின்​றனர். சென்னையில் பல இடங்களில் வீடு வீடாக செல்வ​தில்லை. சோழிங்​கநல்லூர் பகுதியில் படிவங்கள் விநியோகம் முதல் நாள் 13 சதவீதம், 2-வது நாள் 31 சதவீதமாக இருந்த நிலையில், 3-வது நாள் 56 சதவீதமாக உயர்ந்​துள்ளது. படிவங்களை விதிகளை மீறி வழங்கினால் தான் இப்படி விநியோகிக்க முடியும்.

சேப்பாக்கம்- திருவல்​லிக்கேணி தொகுதியில் ஒரு வாக்குச்​சாவடியில் திமுகவின் பிஎல்ஏ- 2 ஆக நியமிக்​கப்பட்ட ஒரு நபர், இன்னொரு வாக்குச்​சாவடியில் தேர்தல் ஆணையத்தின் பிஎல்ஓ ஆக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அதிமுக வாக்குகளை நீக்க வேண்டும் என்பதற்​காகவே திட்ட​மிட்டு பிஎல்​ஓக்களாக படிக்​காதவர்கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். பிஎல்ஓ சார்பில் பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் படம் போட்ட பையில் படிவங்களை வைத்துக்​கொண்டு விநியோகம் செய்கி​றார். காலில் அடிபட்டு நடக்க முடியாதவர்களை பிஎல்ஓ ஆக நியமித்​துள்​ளனர்.

இவர்களால் எப்படி வீடு வீடாக சென்று படிவங்களை கொடுக்க முடியும். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு மாவட்​டங்​களில் எஸ்ஐஆர் பணியில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. திட்ட​மிட்டு அதிமுக வாக்காளர்கள் புறக்​கணிக்​கப்​படு​கின்​றனர். இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். இதை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்​பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட செயலா​ளர்கள்​ ​பால​கங்​கா, விருகை ரவி, ஆதி​ராஜா​ராம், ஆர்​.எஸ்​.​ராஜேஷ், டி.நகர் சத்யா உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *