எஸ்ஐஆர் பணிகளை கண்காணிக்க வேண்டும்: திமுக மண்டல பொறுப்பாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்  | SIR work should be monitored: Stalin

Spread the love

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற்று வரும் எஸ்​ஐஆர் பணி​களை தீவிர​மாக கண்​காணிக்க வேண்​டும் என்று மண்டல பொறுப்​பாளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்​ஐஆர்) தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்​ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்​டணிக் கட்​சிகளு​டன் இணைந்து போராட்​டம், உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு என பல்​வேறு செயல்​பாடு​களை முன்​னெடுத்து வரு​கிறது. அதனுடன் எஸ்​ஐஆர் திருத்​தப் பணிகளுக்கு வழி​காட்​டு​தல்​கள் வழங்க திமுக தலைமை அலு​வல​கத்​தில் சிறப்பு உதவி மையத்​தை​யும் அமைத்​துள்​ளது.

இந்​நிலை​யில் எஸ்​ஐஆர் திருத்​தப்​பணி​களை தீவிர​மாகக் கண்​காணித்து அறிக்கை சமர்ப்​பிக்க வேண்​டுமென 8 மண்​டலப் பொறுப்​பாளர்​களுக்​கும் திமுக தலை​வரும், முதல்​வரு​மான ஸ்​டா​லின் உத்​தர​விட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து திமுக வட்​டாரங்​களில் விசா​ரித்தபோது, ‘‘எஸ்​ஐஆர் பணி​களை மண்டல பொறுப்​பாளர்​களான அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, தங்​கம் தென்​னரசு, எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம், சக்​கர​பாணி, எம்​எல்ஏ செந்​தில்​பாலாஜி, துணைப் பொதுச் செய​லா​ளர்கள் ஆ.ரா​சா, கனி​மொழி எம்​.பி.ஆகியோர் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

இதுத​விர மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொகுதி பார்​வை​யாளர்​களுக்கு சென்​னை​யிலும் ஒன்​றிய, நகர, பேரூர் கழக நிர்​வாகி​களுக்கு வழக்​கறிஞர் குழு​வால் தொகு​தி​யிலும் பயிற்சி அளிக்​கப்​பட்​டது. தொடர்ந்து ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் பூத் கமிட்டி அமைக்​கப்​பட்டு பயிற்சி தரப்​பட்​டது. இதை கண்​காணிக்க மூத்தவழக்​கறிஞர் என்​.ஆர்​.இளங்கோ தலை​மை​யில் ஒவ்​வொரு மண்​டலத்​துக்கு தனித்​தனி​யாக 8 வழக்​கறிஞர் குழுக்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளன. ஒவ்​வொரு பகு​தி​யிலும் எஸ்​ஐஆர் செயல்​படுத்​தப்​படும் விதம் முழு​மை​யாக கண்​காணிக்​கப்​பட்டு அறிக்கை தயாரிக்​கப்​பட்டு வரு​கிறது. அதில் தவறுகள், முறை​கேடு​கள் நடை​பெறாமல் இருப்​பதை உறு​தி ​செய்ய வேண்​டுமென நிர்​வாகி​களுக்கு ஸ்​டாலின் உத்​தர​விட்​டுள்​ளார்’’ என்​றனர்​.

ஸ்டாலின் பதிவு: இதனிடையே ஸ்டாலின் நேற்று வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வு: எஸ்​ஐஆர்-ஐ தடுப்​பதே நம் கடமை. ஒரு​புறம், மக்​களாட்சி​யின் அடிப்படை​யான வாக்​குரிமை​யையே பறிக்​கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்​துக்கு எதி​ராகச் சட்​டப் போராட்​டம், களப் போராட்​டம். மறு​புறம் எஸ்​ஐஆர் பணி​களில் குளறு​படிகளைத் தடுக்க வார்​ரூம் மற்​றும் உதவி எண். களப் போராட்​டத்​தில் இன்று ஆர்ப்​பாட்​டத்​தில் கூட்​ட​ணி​யினர். தொடர்ந்து செய​லாற்​று​வோம். நம் மக்​களின் வாக்​குரிமை​யைப் பாது​காப்​போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *