எஸ்ஐஆர் பணிகளை நிறுத்த தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் மனு | DMK Congress petition Chief Electoral Officer to stop SIR work

Spread the love

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் (எஸ்​ஐஆர்) பணி​களில் பல்​வேறு நடை​முறை சிக்​கல்​கள் உள்ளன. இதை கருத்​தில் கொண்டுசட்​டப்​ பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு எஸ்​ஐஆர் பணி​களை செயல்​படுத்த வேண்​டும். அது​வரை எஸ்​ஐஆர் நடவடிக்​கையை நிறுத்தி வைக்​கக் கோரி தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக்​கிடம், திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.​பாரதி நேற்று மனு அளித்​தார்.

அதன்​பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எஸ்​ஐஆர் நடத்​தக்​கூ​டாது என்று திமுக தலை​மை​யில் 48 கட்​சிகள் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. 4 மாதத்​தில் தேர்​தல் நடை​பெற உள்ள நிலை​யில், எஸ்​ஐஆர் பணி​களால் குழப்​பம் ஏற்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எச்​சரித்​துள்​ளார்.

மேலும், எஸ்​ஐஆர் தொடர்​பாக என்​னென்ன நடை​முறை சிக்​கல்​கள் ஏற்​படும் என்​பதை தேர்​தல் ஆணை​யத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் தெரி​வித்தோம். அனைத்​து கட்​சிகளை​யும் கூட்டி கோரிக்கை வைத்த போதும் கடந்த நவ.4-ம் தேதி முதல் எஸ்​ஐஆர்-ஐ தேர்​தல் ஆணை​யம் அமல்​படுத்​தி​யுள்ளது.

வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களுக்கு (பிஎல்ஓ) இதை பற்றிமுழு​மை​யாக தெரிய​வில்​லை. அவர்​களுக்கு முறை​யான பயிற்​சி​யும் அளிக்​கப்​பட​வில்​லை. பெரும்​பாலான பிஎல்​ஓக்​கள் அங்​கன்​வாடி பணி​யாளர்​கள் மற்​றும் அடிப்​படை வேலையை செய்​பவர்​களாக உள்​ளனர்.

அவர்​கள், தங்​கள் பணி​களை முடித்​து​விட்டு 3 மணிக்கு மேல் கணக்​கீட்டு படிவம் விநி​யோகிக்​கும் பணி​யில் ஈடு​படு​கின்​றனர். புதி​தாக வாக்​காளர் சேர பாரம் 6 கொடுக்க வேண்​டும். ஆனால், பிஎல்​ஓக்​களிடம் பாரம் 6, 7, 8 ஆகியவை இல்​லை. அதனால் டிச.4-ம் தேதிக்​குள் கணக்​கீட்டு படிவங்​களை விநி​யோகம் செய்து அதை பெறு​வது சிரமம்.

இதுத​விர 2009 மறுசீரமைப்​புக்கு பிறகு பல தொகு​தி​கள் மாற்றி அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு பல்​வேறு நடை​முறை சிக்​கல்​கள் இருப்​ப​தால், குறிப்​பிட்ட கால அவகாசத்​துக்​குள் படிவங்​களை பெற்​று, டிச.7-ம் தேதி மாதிரி பட்​டியலை வெளி​யிட முடி​யாது.

எஸ்​ஐஆர் பணி​களை 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பின்​னர் தான் நடை​முறைப்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். அதே​போல், எஸ்​ஐஆர் பணி​களுக்கு எதி​ராக தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, தமிழக முற்​போக்கு மக்​கள் கட்சி செயலர் பிர​பாகரன்​ ஆகியோ​ரும்​ மனு அளித்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *