இதையடுத்து ஏகாம்பரநாதா் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தண்டாயுதபாணி சிலையை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் ஜெயா, நகை சரிபாா்ப்பாளா் குமாா், தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வு குறித்து தொல்லியல் ஆலோசகா் ஸ்ரீதரன் கூறுகையில், கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலை சுமாா் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலை என்றும், சிலையின் கால் மற்றும் பாதங்களில் முழுமை பெறாததால் வழிபாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் இருந்ததால் கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தாா்.
ஏகாம்பரநாதா் கோயிலில் பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!
