JEE main 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 25-ம் தேதி நிறைவு பெறுகிறது. ஜனவரியில் நடந்த முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வையும் எழுதலாம். புதிய தேர்வர்களும் எழுதலாம். முதல் பருவத் தேர்வை எழுதியவர்கள் இந்தத் தேர்வை எழுதும்போது, இரண்டு தேர்வுகளில் எதில் அதிக ரேங்க் பெற்றுள்ளார்களோ அதையே இறுதி ரேங்காக, தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எடுத்துக்கொள்ளும்.
மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை
JEE main தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 31 என்ஐடி-க்கள் (NITs), 25 ஐஐஐடி-க்கள் (IIITs), 40 அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (GFTIs) மற்றும் பல மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் என மொத்தம் 2,100-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
மேலும் இந்தத் தேர்வில் நல்ல ரேங்க் பெறுபவர்கள் JEE advance தேர்வு எழுதத் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வு மூலம் இந்தியாவில் உள்ள IIT-களில் சேரமுடியும்.
JEE main தேர்வை தற்போது பிளஸ்டூ படித்துவரும் மாணவர்கள் எழுதலாம். 2-ம் பருவத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நிறைவுறும் தருவாயில் இருக்கிறது. தற்போது இந்தத் தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.