`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு’- கழிவறை இல்லாத அரசுப் பள்ளி… மனம் வெம்பும் மாணவர்கள்!

Spread the love

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1949-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியானது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடங்கப்பட்ட முதல் உயர்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஆரம்பத்தில் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு இருந்தாலும், காலப்போக்கில் மேல்நிலைப் பள்ளியாகவும் வளர்ச்சியடைந்தது.

தற்போது, இப்பள்ளியில் கீழப்பெரும்பள்ளம், மேலபெரும்பள்ளம், வானகிரி மற்றும் கீழையூரைச் சார்ந்த 280-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் கல்வி பயில்கின்றனர். ஆனால், இப்பள்ளியில் ஆண்களுக்கென கழிவறை வசதியின்றி, வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கும் அவநிலையானது பல ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணமே உள்ளது. மேலும் இப்பள்ளியின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே உடைந்தும், செடி கொடிகள் படர்ந்தும், மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது.

இது குறித்து அப்பள்ளி மாணவர்களிடம் விசாரித்தபோது, “எங்க ஸ்கூல்ல பல வருசமா பாத்ரூம் இல்ல. பாத்ரூம் இருக்கு ஆனா, அந்த பாத்ரூம்ல தண்ணிலாம் வராது. அதனால நாங்க வெட்ட வெளியிலதான் பாத்ரூம் போறமாறி இருக்கு. எங்களுக்கே ஒரு மாதிரி இருக்கும். வெட்ட வெளியில போறதுனால, 100.மீ, நடந்துதான் போகணுமே.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *