பட்டுக்கோட்டை நகரப்பகுதியை சேர்ந்த இருதயராஜ் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஷீலாராணி. இவர்களுக்கு ஒரு மகனும், பிரின்சியா என்ற மகளும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்ட குடும்பம்.
பிரின்சியாவுக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவு. 2022-ஆம் ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய அவர் 560 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். டாக்டராக படிக்க வேண்டும் என்பதற்காக கடும் சிரமத்திடையே NEET நுழைவுத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றார். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிரின்சியாவிற்கு சீட் கிடைத்தது.

படித்து முடிக்க பெரும் தொகை செலவாகும்; இதை தன் குடும்பம் தாங்க முடியாது என்பதை நன்கு அறிந்த அவர், கட் ஆப் மார்க் அதிகம் வருவதற்காக தொடர்ந்து இரண்டு வருடங்கள் NEET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.
ஆனால் போதிய கட் ஆப் இல்லாததால் தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவருக்கான சீட் கிடைத்தது. இதற்கும் படித்து முடிக்க பல லட்சம் செலவாகும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருந்தால் குறைந்த செலவே ஆகும்; ஆனால் அந்த வாய்ப்பு பிரின்சியாவிற்கு அமையவில்லை.