ஏவிஎம் சரவணன்: “என் அசையா சொத்து இவர்கள்தான்” – நடிகர் ரஜினிகாந்த் | AVM Saravanan: “Them are my immovable properties” – Actor Rajinikanth

Spread the love

ஏ.வி.எம். நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏவி.எம்.சரவணன் கடந்த டிசம்பர் 4-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஏவி.எம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.வி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மறைந்த ஏவி.எம்.சரவணன் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

படத்திறப்பு நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஏவி.எம்.சரவணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்

நினைவேந்தல்: ஏவி.எம் சரவணன்

இந்த நிகழ்வில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “1975ல் ஏவிஎம் ஸ்டுடியோவில் “அவர்கள்’ பட சூட்டிங். அப்போதுதான் கமல்சார் எனக்கு இவர்தான் ஏவி.எம் சரவணன் சார் எனக் காண்பித்தார்.

அதற்குப் பிறகு, 8 வருடம் கழித்து ஏ.வி.எம் 1980-ல் முரட்டுக்காளை படம் தயாரித்தது. அந்தப் படத்தில் ஏவி.எம் செட்டியார் ஆலோசனையில் என்னை ஹீரோவாகத் தேர்வு செய்தார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *