‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை ஆசையோடும் காதலோடும் தயாரித்தார். அந்தப் படம் ஜனாதிபதி பரிசு பெற்ற போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
ஏவி.எம்மின் ஐம்பதாவது ஆண்டு விழாவை மிக மிக விமர்சையாக கொண்டாடினார்.
ஐம்பதாவது ஆண்டில் 1997ல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் மின்சாரக்கனவு படத்தை வெளியிட்டு வெற்றிக்கொடி நாட்டினார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு கூட என்னை அவர்கள் ஸ்டுடியோவில் உள்ள கோயிலுக்கு வரச் சொல்லி 6 மணிவரை பேசுவார்.
6.20 க்கு அந்த ‘மகாபாரதம்’ சீரியல் போடுவார்கள். டிவியில் அதைப் பார்ப்பதற்காக வீட்டுக்குப் போய்விடுவார். அவர் சினிமாவை நேசித்தார். நேசித்தது மட்டுமல்ல சினிமாவைத் தவிர அவர் வேறு எந்தத் தொழிலை செய்யவில்லை.
அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் கடைசியாக ஒரு இரண்டு மாதத்திற்கு முன்னால் கூட நான் அவரைப் பார்த்து பேசினேன்.