ஏவுகணைத் தளங்களை முடக்கும் இஸ்ரேல் – ட்ரோன் மழையை ஏவும் ஈரான்: உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா! |Israel to disable missile sites – Iran to launch drone barrage: Gulf at peak tension!

Spread the love

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. சனிக்கிழமையன்று தொடங்கிய இந்தத் தாக்குதலில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் துல்லியமான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதற்குப் பதிலடியாக ஈரான் ஏவி வரும் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தற்காப்பு அரண்களைப் பலவீனப்படுத்தி வருகின்றன என்ற செய்தியும் வெளியாகி வருகிறது.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரானின் ‘ஷாஹித்-136’ (Shahed-136) ரக தற்கொலை படை ட்ரோன்கள், சிறிய ரக க்ரூஸ் ஏவுகணைகளுடன் இணைந்து சவூதி அரேபியா முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரையிலான அமெரிக்கத் தளங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி வருகின்றன. அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் இந்த ட்ரோன்களை 90% வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தினாலும், இதில் ஒரு பாரிய பொருளாதாரச் சிக்கல் இருக்கிறது.

ஈரான் பயன்படுத்தும் ஷாஹித் ட்ரோன்கள் மிகவும் எளிமையானவை. அவற்றின் ஒரு யூனிட் விலை சுமார் $20,000 (சுமார் ₹17 லட்சம்) மட்டுமே. ஆனால், அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தும் பேட்ரியாட் ஏவுகணையின் விலை $4,000,000. ஈரானின் ஒரு மலிவான ட்ரோனை அழிக்க, அமெரிக்கா 200 மடங்கு அதிகப் பணத்தைச் செலவிடுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *