19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரை இந்திய அணி அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று (ஜனவரி 18) மலேசியாவில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் இன்று (ஜனவரி 19) விளையாடியது.
44 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் 13.2 ஓவர்களில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் கெனிகா கேசர் அதிபட்சமாக 15 ரன்கள் எடுத்தார். 5 வீராங்கனைகள் ரன் ஏதும் எடுக்காமலும், 3 பேர் ஒற்றை இலக்க ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.