ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. முன்னதாக, ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டனர்.
இதையும் படிக்க: இந்தியாவை வெல்ல உதவிய நியூசி. வீரருக்கு அணியில் இடமில்லை!
இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று (நவம்பர் 15) வெளியிட்டுள்ளது.
NEWS
TATA IPL 2025 Player Auction List Announced!
All the Details #TATAIPLhttps://t.co/QcyvCnE0JM
— IndianPremierLeague (@IPL) November 15, 2024
ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 வீரர்கள் (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உள்பட) வெளிநாட்டு வீரர்கள். இந்திய வீரர்கள் 366 பேரில் 318 பேர் அன்கேப்டு வீரர்கள். வெளிநாட்டு வீரர்களில் 12 பேர் அன்கேப்டு வீரர்கள்.
அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் 81 வீரர்கள் உள்ளனர். ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் 18 வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலையில் 23 வீரர்களும் உள்ளனர்.
இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) பிற்பகல் 1 மணிக்கு தொடங்குவது குறிப்பிடத்தக்கது.