ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

Spread the love

மின்னணு சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபோன் 17, செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாரிப்புப் பணிகள் இந்தியாவில் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவுக்குச் சொந்தமான ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆப்பிள் நிறுவனத்துக்கு உலகில் மிகப்பெரிய தயாரிப்பு வசதி உடைய இரண்டாவது ஆலை இதுவாகும். முதலிடத்தில் சீனா உள்ளது.

ஆங்கில ஊடகமான சி.என்.பி.சி. தகவலின்படி, சென்னை அருகேவுள்ள ஃபாக்ஸ்கான் ஆலையிலும் ஐபோன் தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

2025 மார்ச் மாத நிதியாண்டின்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஐபோன் தயாரிப்பு மதிப்பு 22 மில்லியன் டாலர்கள். 2026 நிதியாண்டில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *