நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார்.
இந்த நிலையில், அண்மை காலமாக அபிஷேக் பச்சன்(48) – ஐஸ்வர்யா ராய்(50) தம்பதியினரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் மாபெரும் பொருட்செலவில் நடைபெற்ற தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில், இவர்கள் இருவருக்கும் இடையேயான விரிசல் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராய் தன் மகளுடன் திருமண விருந்துக்கு சென்றிருந்ததையும், மறுபுறம் இத்திருமண விழாவுக்கு அபிஷேக் பச்சன் தனியாகச் சென்றிருந்ததையும் காண முடிந்தது.