இதனால் ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9.500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
கா்நாடகம், கேரள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளில் கூடுதல் உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.