இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, புவனேஸ்வர், பத்ரக் மற்றும் கட்டாக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் போலீசார் அதிரடி சோதனையை நடத்தி இருக்கின்றனர்.
இந்தச் சோதனையில், நேற்று புவனேஸ்வரில் உள்ள தேபபத்ரா மொஹாண்டியின் வீட்டில் டிராலி பேக்குகள் மற்றும் அலமாரிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இது தவிர, 1.20 லட்சம் ரூபாயும், 130 கிராம் தங்க நகைகளும் அவரது அலுவலக மேசையிலிருந்து கண்டறியப்பட்டன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.