இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் அன்பார்ந்த பங்குதாரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தச் செய்தியை மிகுந்த மனவேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு, எங்களால் கட்டுப்படுத்த முடியாத தவிர்க்க முடியாத சூழல்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் உணர்வுகளை நாங்கள் ஆழமாகப் புரிந்துகொள்கிறோம்.
இந்த முடிவு எங்களில் எவருக்கும் எளிதானதல்ல. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களது அசைக்க முடியாத ஆதரவே ‘ஜனநாயகன்’ குழுவினருக்கு மிகப்பெரிய பலமாகவும், எல்லாவற்றுக்கும் மேலானதாகவும் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.