ஆர்யா பேசுகையில், “ராஜா ராணி திரைப்படத்தில் நான் டபுள் கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஒருவருடைய கேரக்டர் வலுவாக இருந்தால்தான், இன்னொரு கேரக்டர் மெருகேறும்.
‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில், டான்சிங் ரோஸ், வாத்தியார் என அனைவருடைய கதாபாத்திரமும் மிகவும் முக்கியம்.
அப்படி இல்லையென்றால், அது சாதாரணமான ஒரு ஹீரோ திரைப்படமாக மாறிவிடும். அந்தப் புரிதலும், இப்படியான கேரக்டர்களை ஏற்று நடிக்கத் தன்னம்பிக்கையும் வேண்டும்.
நமக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாம் சிறப்பாக நடிக்க வேண்டும். ஒரு நடிகராக இப்படி நாம் செக்யூராக உணர வேண்டும்.

மல்டி ஸ்டாரர் திரைப்படங்களில் நடிக்கும்போது, அங்கு வலுவான போட்டியும் இருக்கும். அத்தனை நடிகர்கள் ஒரு காட்சியில் நடிக்கும்போது, நம்முடைய பெஸ்டை நாம் கொடுக்க வேண்டும் என நமக்குத் தோன்றும்.
பரஸ்பரம் பாராட்டுகளைப் பகிர்ந்துகொள்வோம். அப்போது, அந்தக் காட்சியும் நல்லபடியாக வரும்.
சில நேரங்களில் நம்மைவிட மற்றொரு நடிகருக்கு நல்ல காட்சி இருக்கிறதே என நினைத்து, காட்சிகளை மாற்றினால், படமே காலியாகிவிடும்!” எனத் தெரிவித்திருக்கிறார்.