'ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி; மற்றவை…' – பேச்சுவார்த்தைக்கு பின் காங்கிரஸ்!

Spread the love

திமுகவின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது.

Congress
Congress

அதை தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசியதாவது, ‘கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்டிருக்கிறோம். முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு கூறுவதாக சொல்லியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சுமுகமாக போயிருக்கிறது. ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர் உறுதி கொடுத்திருக்கிறார்.

இது கொள்கை கூட்டணி. மதவாதிகளுக்கு எதிரான கூட்டணி. தவெகவுடன் பேசுவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. ஊடகங்கள் திரித்துவிட்டன. ராகுல் காந்தி, கார்கே எல்லாரும் திமுகவுடன் பேசவே சொல்லியிருக்கின்றனர்.

இல்லாததை எழுதினால் அவதூறு வழக்குகள் தொடுப்போம்.’ என்றார். ‘கூட்டணிப் பேச்சுவார்த்தை நம்பிக்கையோடு செல்வதாக கிரிஷ் சோடங்கர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *