இப்படி பெட்ரோல், வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், குழந்தைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணம் என எல்லாவற்றின் விலை கண்ணாபின்னாவென்று ஏறினால், இப்போது இருக்கும் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு எப்படிக் குறையாமல் இருக்கும்? 20 வருஷம் கழிச்சு அது வெறும் 37 லட்சம் ரூபாயத்தானே இருக்கும்!
பொருள்களோட விலை உயர்றதை நம்மால தடுக்க முடியாது. அதனால பணத்தோட மதிப்பு குறையுறதும் நம்மால தடுக்க முடியாது. ஆனா, நாம கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துகிட்டா, பணத்தட்டுப்பாடு என்கிற பிரச்னையே இல்லாம இருக்கலாம். எப்படி?
20 வருஷம் கழிச்சு நம்மகிட்ட ரூ.2.65 கோடி இருந்துதுன்னா, நாம பணம் தொடர்பான எந்தப் பிரச்னையும் இல்லாம ஜாலியா இருக்கலாம். இந்த 2.65 கோடி ரூபாயை நீங்க எப்படி சேர்க்கப் போறீங்க? அதுக்கு என்ன திட்டம் வச்சிருக்கீங்க என்கிறதுதான் முக்கியமான கேள்வி!
சிந்திச்சுப் பாருங்க மக்களே! இதுக்கு உங்ககிட்ட என்ன திட்டம் இருக்குன்னு கமென்ட்ல போடுங்க மக்களே!