உணவில் மாற்றம் செய்வது மிக முக்கியம். தினமும் கீரை, காய்கறி, பப்பாளி, பழுத்த வாழை, பேரீச்சை போன்ற பழங்கள், ராகி, ஓட்ஸ் போன்ற முழுதானியங்களையும் சேர்க்க வேண்டும். இவை மலம் மென்மையாகவும் எளிதாகவும் வெளியேற உதவும்.
தண்ணீர் போதுமான அளவில் குடிக்க வேண்டும். நாள் முழுவதும் சிறு அளவுகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உருவாக்கப்பட வேண்டும். இது மலம் கெட்டியாகாமல் தடுக்கும்.

தினசரி ஒரே நேரத்தில், குறிப்பாக, காலை உணவுக்குப் பிறகு, 5–10 நிமிடங்கள் அமைதியாக உட்கார வைத்து மலம் கழிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். குழந்தைக்கு அழுத்தம் கொடுக்காமல், அமைதியான சூழலில் பழக்கப்படுத்துவது முக்கியம்.
வெளியில் விளையாடுதல் மற்றும் உடல் இயக்கம் போன்றவை குடல் இயக்கத்தை மேம்படுத்தும். சில சமயங்களில் மருத்துவர் ஆலோசனையின்படி மலமிளக்கி (stool softener) மருந்துகள் தேவைப்படலாம். இவை வலியின்றி மலம் கழிக்க உதவி செய்து, பயத்தைக் குறைக்கும். ஆரம்பத்திலேயே சரியான உணவு மற்றும் பழக்கங்களைச் சரி செய்தால், பெரும்பாலும் இந்த நிலை முழுமையாக சரியாகிவிடும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.