தேவை அதிகரிக்கும்: அப்படி வரும் சூழலில், தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான விவிபேட் இயந்திரங்களின் தேவை இருமடங்காக இருக்கும். அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் 81 ஆயிரத்து 157 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 86 ஆயிரத்து 858 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை நடைமுறைக்கு வரும் காலத்தில், சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை மட்டுமன்றி, அந்த காலகட்டத்தில் வேட்பாளா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.