'ஒவ்வொரு குடும்பத்துக்கும் விலையில்லா ஃபிரிட்ஜ்' – தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி

Spread the love

சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி

> மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம்.

> அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ்

> ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம்

> முன்னாள் படைவீரர் பிள்ளைகளுக்கு அரசு, கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பயில 1 சதவிகிதம் இடஒதுக்கீடு

> ஊரக வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு உயர்த்தப்படும்

> வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளிபடி செய்யப்படும்

> தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை

> ஜல்லிக்கட்டின்போது காயமடைந்தால் 2 லட்சம்; உயிரிழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

> கோயில்களில் அன்னதானத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

> ராணுவத்தில் உயிர்நீத்த, படை வீரர் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்

> வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்

> வீடு இல்லாத குடும்பங்களுக்கு ‘அம்மா இல்லம்’ திட்டத்தின் பெயரில் வீடு கட்டித்தரப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

More details will be updated here..!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *