ஓபிஎஸ்ஸிற்கு திமுக கொடுத்த முதல் அசைன்மெண்ட்..! இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

Spread the love

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த கையோடு தென் மாவட்டங்களில்  சுற்றுப்பயண பிரசாரம் செய்வதற்காக கிளம்பியிருக்கிறார்.

’ஓபிஎஸ்ஸின் கூடாரம் காலியாகி விட்டது, அவருடன் யாரும் இல்லை’ என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் திமுகவோ, ஓ.பன்னீர்செல்வத்தை வைத்து தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப ஒரு மெகா பிளானை உருவாக்கி அதை சாத்தியப்படுத்த அவரை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

திமுக கொடுத்திருக்கும் இந்த அசைன்மெண்ட்டை ஓ.பன்னீர்செல்வம் வெற்றிகரமாக செய்தால் மட்டுமே கட்சிக்குள் அவருடைய வளர்ச்சி இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.

ஓ. பன்னீர்செல்வம்

ஓ. பன்னீர்செல்வம்

இது குறித்து நம்மிடையே பேசிய சீனியர் திமுக நிர்வாகிகள், “ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து வெளியே வந்ததும் முக்குலத்தோர் சமூகங்களே அவருக்கு ஆதரவாக நின்றது. இதனாலேயே கடந்த முறை தென் மாவட்டங்களில் அதிகளவு தொகுதிகளில் அதிமுகவால் வெற்றி பெற முடியாமல் போனது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளினால் அதிருப்தியடைந்த அவருடைய ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளில் இணைந்து விட்டனர். சொற்ப எண்ணிகையிலான ஆட்களை சேர்த்து கொண்டே திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்!

டி.டி.வி.தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா

டி.டி.வி.தினகரன், ஒ.பன்னீர்செல்வம், சசிகலா

தென் மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை பெறுவதற்காக அனைத்து கட்சிகளும் வியூகம் வகுக்க தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், டிடிவி தினகரன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி, பாஜக என எல்லோருமே முக்குலத்தோர் சமூகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சசிகலாவும் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *