கங்கனாவை பாஜக வெளியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி

Dinamani2f2024 08 282fj3fwpkco2franaut.jpg
Spread the love

விவசாயிகளின் போராட்டம் குறித்து கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாபில் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் போராட்டம் குறித்து பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறிய கருத்துக்களுக்கு எதிராக ஆம் ஆத்மி பஞ்சாபின் விவசாயிகள் பிரிவு புதன்கிழமை பஞ்சாபின் மொஹாலி நகரில் போராட்டம் நடத்தினர்.

கங்கனாவின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்யக் கோரி போராட்டத்தில் முழக்கம் எழுப்பியுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக அவர் பேசுவது இது முதல் முறை அல்ல என்றும், அவரை உடனடியாக கட்சியிலிருந்து பாஜக வெளியேற்ற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினர்.

பஞ்சாபில் உள்ள பாஜக அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *