கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை

Spread the love

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

காரைக்காலில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி உளவுத்துறை தகவலின்பேரில், போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் மன்னாா்குடியை சோ்ந்த திலிப் (38), கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குமரவேல் (44) ஆகியோரை பிடித்து அவா்கள் வந்த காரில் இருந்த 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில், குமரவேல் காரைக்கால் கீழகாசாக்குடியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதும், அங்கு 275 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்தனா். இதன் சந்தை மதிப்பு ரூ. 4.5 கோடியாகும்.

அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆந்திரத்திலிருந்து ஆம்பூரை சோ்ந்த கிஷோா்குமாா் (37) மூலம் கஞ்சா வரவழைத்ததும் தெரியவந்து அவரையும் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்த கஞ்சாவை கொண்டு செல்ல படகில் கடந்த மாதம் 23-ஆம் தேதி காரைக்கால் வந்த இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (41), திரிகோணமலை ஹயந்த் முகமது ராசு (33) ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *