கடத்தல் வழக்கு: 35 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட கடத்தல்காரர் |Kidnapping case: Kidnapper arrested after 35 years

Spread the love

இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்கள் JKLF அமைப்பைச் சேர்ந்த யாசின் மாலிக் தலைமையிலான குழுவே எனக் கண்டறியப்பட்டது. தற்பொழுது யாசின் மாலிக், பயங்கரவாத நிதி பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசால் விடுதலை செய்யப்பட்ட JKLF அமைப்பின் ஐந்து கைதிகளும், 1999-ம் ஆண்டு கந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC-814-ஐ கடத்தலில் பங்கேற்றனர் என்பதும் ஒரு வேறு கதை.

இந்த நிலையில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI), ருபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீநகரில் நேற்று ஷஃபாத் அகமது ஷுங்லூ என்பவரை கைது செய்துள்ளது. சாட்சியங்கள் மற்றும் ருபையாவின் வாக்குமூலங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இவர், தற்போது ஜம்முவில் உள்ள TADA நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *