கடலூர் மாவட்டம், திருச்சோபுரம் திருச்சோபுரநாதர்: மண் மூடிப்போன ஆலயத்துக்குள் பூஜை நடந்த அதிசயம்! | cuddalore thiruchopuram thiruchopuranathar temple

Spread the love

7-ம் நூற்றாண்டு தலயாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர் தன் பிஞ்சுப்பாதங்கள் இந்த நிலத்தில் பதிய தமிழ் மண்ணெங்கும் நடந்து திரிந்தார். அப்படி அவர், கடலூர் அருகே இருக்கும் சோபுரம் திருத்தலத்துக்குச் சென்றார்.

அங்கே இருந்த ஈசனை `வில்லைக் காட்டிலும் வளைந்த அழகிய புருவமும், வேல்போன்ற விழிகளும் கொண்ட வேல்நெடுங்கண்ணி அம்மையுடன் ஊழிதோறும் நிலைத்திருக்கும் சோபுர நாதனே’ எனப் போற்றிப் பாடி மகிழ்ந்தார்.

அப்போதுதான் அவரோடு வந்தவர்களுக்குத் தெரிந்தது அது நான்கு யுகங்களாக நிலைத்திருக்கும் தலம் என்று.

கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில், ஆலப்பாக்கம் ரயிலடி எனும் ஊரிலிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, திருச்சோபுரம்.

வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கி.பி. 6-ம் நூற்றாண்டுக்குமுன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று அறியமுடிகிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் மீன் சின்னங்களைக் கொண்டு, இந்த ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு, மற்ற மன்னர்களாலும் திருப்பணி கண்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் பிராகார லிங்கம்

திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோயில் பிராகார லிங்கம்

ஒருமுறை வங்கக்கடல் பொங்கி எழுந்தது. திருச்சோபுரநாதர் ஆலயம் கடல்நீரில் மூழ்கியது. நாளடைவில் கடல்நீர் வற்றினாலும், கோயில் மண்ணுக்குள் புதையுண்டு போனதாம்.

ஆலயத்தை மண் மூடியிருந்த மேட்டை `கோயில் மேடு’ என்றே அழைத்து வந்தனர். அப்போது ஒருநாள். மதுரை ஆதீன திருமடத்தின் தம்பிரான் ஸ்ரீமத் ராமலிங்க சிவயோகி தம்பிரான் சுவாமிகள் நடுநாட்டு தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு இவ்வூருக்கு வந்தார்.

இப்பகுதி மக்களிடம் சோமநாதர் ஆலயம் எங்கு இருக்கிறது என்று விசாரித்தார். அவரை மணல்மேடு பகுதிக்கு அழைத்துச் சென்ற மக்கள், ‘இங்கு ஆலயம் எதுவும் இல்லை. ஆனால் இந்த இடம்தான் காலகாலமாக கோயில் மேடு என அழைக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்கள். மெய்சிலிர்த்த தம்பிரான் சுவாமிகள், அந்த ஆலயத்தின் வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூற ஆரம்பித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *