டி.கே.சிவக்குமார் என்ன சொல்கிறார்?
டி.கே.சிவக்குமாரோ, “அரசியல் ரீதியாக நாங்கள் இருவரும் ஒரே திசையில் பயணிக்கிறோம். கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை அப்படியே நாங்கள் பின்பற்றுவோம்.
எதிர்காலத்திலும், கட்சிக்குள் எந்தப் பிரிவினைவாதமும் இருக்காது. 2028-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அனைத்து எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சியும் வலுவாக மாற வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
இருவருமே கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ, அதை செய்வோம் என்பதை இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மையப்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவி குறித்து தான் ஒளிவுமறைவாக பேசுகிறார்கள்.
ஆக, கட்சி மேலிடம் என்ன செய்யப்போகிறது… என்ன முடிவு எடுக்கப்போகிறது? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!